கேள்விப்பட்டேன்
இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் ஷியாம் சரண், சமீபத்தில் இலங்கை சென்று அந்நாட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷேவைச் சந்தித்துவிட்டு வந்துள்ளார்.'இலங்கை அரசை விடுதலைப்புலிகளுடன் பேச்சு வார்தைக்கு இணங்க வைத்து, அதிகாரப் பகிர்வின் மூலம் பிரச்சனைக்குத் தீர்வு காணவேண்டும்' என்ற இந்திய பிரதமரின் திட்டத்தைத் தெரிவிப்பதே பயண நோக்கம் என்று சொல்லப்பட்டாலும், உண்மை அது இல்லையாம். பாகிஸ்தானிடம் "வான்வெளியை கண்காணிக்கும் ராடார் வேண்டும்" என இலங்கை அரசு கேட்டிருந்ததாம். இரு நாடுகளும் ராணுவ நடவடிக்கைகளில் ஒன்று சேர்வது எதிர்கால ஆபத்தாக அமையலாம் என கருதிய இந்தியா, தானே முன்வந்து ராடார்களை இலங்கைக்கு வழங்க முடிவெடுத்ததாம். இதனை முறைப்படி ஒப்படைக்வே சரண் சென்றாராம். இந்தத் தகவல் தெரிந்து, தமிழக புலி ஆதரவு தலைவர்கள் துள்ளிக் கொண்டு இருக்கிறார்களாம்.
No comments:
Post a Comment