நாகப்பட்டினத்தில் காத்தான் என்பவர் அன்னசத்திரம் ஒன்றை நடத்தி வந்தார். அங்கு வந்த காளமேகம் பசி தீர்க்க, மாலை இருட்டும் நேரம் சத்திரத்தினுள் சென்றார். சத்திரத்து நிர்வாகி அவரை வரவேற்று அமரச் செய்தார். "கொஞ்சம் பொறுங்கள், சாப்பாடு தயாரானதும் அழைக்கிறேன்" என்று வாசல் திண்ணையில் அமர வைத்தார். அநத காலங்களில் வீட்டுக்கு வீடு திண்ணை கட்டிதான் வீடு கட்ட வேண்டும் சோழனின் ஆணை வழபோக்கர்கள் தங்க. காளமேகமும் தன்னைப் போல் சாப்பாட்டுக்கு வந்திருந்தோருடன் அமர்ந்தார்.
ஆனால் வெகு நேரம் காத்திருந்தும் சாப்பாடு போட வில்லை. காளமேகத்துக்கோ அகோரப்பசி. சிறு குடலை பெரு குடல் மேய்கிறது பொறுமை இழந்து அப்பனே நீ சாப்பாடு போடுவதற்கு என் உயிர் போகும் போல இருக்கு என்றார் ,நிர்வாகி "இதோ ஆயிற்று; கொஞ்சம் பொறுங்கள்" என்று அமைதிப் படுத்தினார். அவருக்கு வந்திருப்பவர் காளமேகம் என்று தெரியாது. நடுநிசியும் ஆயிற்று. சாப்பாடு தாயாராகவில்லை.புலவருக்குப் பசி அதிகமாகி கோபம் சீறிக் கொண்டு வந்தது. நிர்வாகியைக் கூப்பிட்டார். அதற்குள் அவரே அவரைச் சாப்பிட அழைத்தார். காளமேகம் "என்னய்யா சத்திரம் நடத்துகிறீர்கள்? சாப்பிட வந்தவன் என்றால் அவ்வளவு இளக்காரமா?" என்று கத்தினான். நிர்வாகி "கொஞ்சம் தாமதம் தான் ஆகிவிட்டது. மன்னிக்கவேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். "கொஞ்சமா? பொழுது விடிந்து விடும் போல இருக்கிறதே!" என்று கோபப் பட்டு ஒரு பாடல் பாடினார்.
இலையில் இட வெள்ளி எழும்.
என்று பாடினார்
அலை சத்தம் மிடும் கடல்சூழ்ந்த நாகைப் பட்டினத்துக் 'காத்தான்' என்பவனது சத்திரத்தில் சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில்தான் சமைப்பதற்கு அரிசி வந்திறங்கும்; அரிசியைக் களைந்து உலையிலே இடும்போதோ ஊர் அரவம் அடங்கி நள்ளிரவு ஆகிவிடும். சோறு தயாராகி, வந்தவர்க்கு ஒரு அகப்பைச் சோற்றை இலையில் இடும்போது வெள்ளி நட்சத்திரம் தோன்றுகிற விடியற்காலம் தோன்றிவிடும்.
இந்தப் பாடலலைக் கேட்ட நிர்வாகி பயந்துபோய் சத்திரத்து முதலாளி காத்தானிடம் ஓடி போய் அழைத்து வந்தார். காத்தானுக்கு வந்திருப்பது கவி காளமேகம் என்று தெரிந்து விட்டது. காளமேகத்திம் தன்னைப் பொறுத்தருளுமாறு வேண்டினார். "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும்; தயவு செய்து மாற்றிப் பாட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். அதற்குள் சாப்பிட்டுப் பசி தணிந்த நிலையில் காளமேகம் காத்தானின் வேண்டுகோளுக்குச் செவி சாய்த்தான். "மாற்றிப் பாட வேண்டியதில்லை; இதையே பாராட்டாகக் கொள்ளலாம்" என்று சொல்லி அவரே அந்தப் பாடலை மறுபடியும் பாடி வேறு பொருள் சொன்னான்.
'காத்தானது சத்திரத்தில் அத்தமிக்கும் போதில் - அதாவது பஞ்ச காலத்தில் அரிசி மூட்டை மூட்டையாய் வந்திறங்கும். ஊரே அங்கு இடும் உணவை உண்டு பசி அடங்கும். இலையில் விழும் ஒரு அகப்பை அன்னம் வெள்ளி நட்சத்திரம் போலப் பளீரென்று வெண்மையாக இருக்கும்'.
என்று பதில் சொன்னார்
(குடந்தையில் சோழியப் பார்ப்பனன் ஒருவன் தான்
உண்டுகொண்டிருந்த இலையில் அவிழ்ந்து விழும் தன் குடுமியை
எடுத்து உதறியபோத அதனின்றும் எச்சில் சோறானது
காளமேகப் புலவரது இலையில் வந்து விழக்கண்டு அது
குறித்துச் சினமுற்று பாடியது)
சுருக்குஅவிழ்ந்த முன்குடுமிச் சோழியா! சோற்றுப்
பொருக்குஉலர்ந்த வாயா! புலையா! - திருக்குடந்தைக்
கோட்டானே! நாயே! குரங்கே! உனைஒருத்தி
போட்டாளே வேலையற்றுப் போய்!
என்று பாடுகிறார்