Friday, July 28, 2006

ஆகாயவிமானம்



ஆகாய விமானத்தைக் கண்டு பிடித்தது யார்?


ரைட் சகோதரர்களுக்கு முன் நம்மவர்கள் தான்!!!


பறக்கும்கோட்டைகளைக் குறித்து ஒரு பழந்தமிழ்க் கவிஞர் பாடியுள்ளார். ஆகாயத்தில் இயங்கிய அக் கோட்டை தூங்கெயில் என்று பெயர்பெற்றிருந்தது; பறக்கும் கோட்டையில் உள்ளேயிருந்து பகைவன் நாடு நகரங்களைப் பாழாக்கினான். அப்பொல்லாப் பகைவனை ஒரு சோழ மன்னன் வென்றான்; அவன் ஊர்ந்து சென்ற ஆகாயக் கோட்டையை ஒரு படைக்கலத்தால் அடித்து ஒழித்தான். அவ் வீரனைத் தூங்கெயில் எறிந்த தொடித் தோட் செம்பியன் என்று தமிழ் நாடு போற்றிப் புகழ்ந்தது. அம் மன்னன் கையாண்ட படைக்கலம் இன்னதென்பது இப்பொழுது தெரியவில்லை.


மற்றோர் அரசன் ஒருபெரிய நாட்டை அண்டு வந்தான். தரையில் போர் செய்வதற்கு நால்வகைச் சேனையும் அவனிடம் நன்கு அமைந்திருந்தன. ஆயினும், விண்ணிலே பறந்து செல்வதற்கு விமானம் ஒன்று செய்ய பணித்தான். அவன் விரும்பியவாறு ஆகாய விமானம் ஒன்று ஏழு நாளில் ஆக்கப்பட்டது. நல்லரக்கும், மெழுகும், பல்டகிழியும், பயினும் கொண்டு பாங்குறச் செய்யப் பட்ட ஆகாய விமானத்தின் அழகு மன்னவன் மனத்தைக் கவர்ந்தது. விமானத்தை இயக்கும் பொறி வியக்கத் தக்கதாய் இருந்தது. அப் பொறியை வலப்பக்கத்தில் கை விரலால் மெல்ல அசைத்தால் விமானம் எழுந்து மேலே பறக்கும்; மேக மண்டலத்திற்கு மேலாகச் செல்லும். அப் பொறியை இடப்பக்கத்தில் அசைத்தால்விமானம் கீழே இறங்கிக் கால் குவித்துத் தரையிலே தங்கும்.


இத் தகைய மயில் விமானத்தை அம் மன்னன் முதலில் தன் மாளிகைப் பூந்தோட்த்திலே இயக்கிப் பழகினான்; எளிதாக அவ் வானவூர்தி இயங்கும் தன்மையை அறிந்து, தன் காதல் மனைவிக்கும் அதை இயக்கும் முறையைக் கற்பித்தான். விமானத்தை முறுக்கி மேலே பறக்கவும், எளிதாக இறக்கவும் கற்றுக்கொண்ட அரமாதேவி மாளிகையைச் சூழ்ந்த இடங்களிலும் புங்காவனததிலும்அதன்மீது ஏறிச் சுற்றி இன்புற்றிருந்தாள்.


நாட்டை அபரித்த அமைச்சருடன் பேராட வேண்டியதால் நிறைமாத அரசியை அந்த மயில் விசையில் ஏற்றி அனுப்ப அது சுடுகாட்டிஇறங்க அங்கோ சீவகன் பிறந்தான்.


இராவணனிடம் புட்பக விமானம் இருந்தது,

போகர் சித்தரும் விமானம் செய்து ஓட்டியிருக்கிறார்

கண்ணகியையும் வானஊர்த்தி வந்து அழைத்துச் சென்றதாம்

4 comments:

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

எனக்கென்னவோ இது நம் தமிழ் புலவர்களின் கற்பனை போலத் தான் தெரிகிறது என்னார் ஐயா.

ENNAR said...

கற்பனைக்கும் ஒரு ஆதாரம் வேண்டும் அல்லவா? அதன்படி பார்க்கையில் பல ஆயிரம் அண்டுகளுக்கு முன் நாம் இன்று வாழ்வது போல் மக்கள் வாழ்ந்து மின்சாரம் கப்பல் விமானம் பயன் படுத்தி பெரும்பகுதி அழிந்து அதைக்கண்ட மக்கள் மற்றவர்களுக்குச்சொல்லியிருக்கலாம்.
அல்லது பயன் படுத்தியிருக்கலாம்.

சிவமுருகன் said...

கட்டுரை மிக அருமை,

மேலும் மயனன் செய்த த்ரிலோகமும் (பொன் லோகம், வெள்ளி லோகம், தாமிரம் லோகம்), மனையடி சாஸ்திரமாக இன்றும் பெயர் பெற்று வருவது தங்கள் அறிந்திருக்கக் கூடும்.

பரங்கியர் அபகரித்த களஞ்சியத்தை இயன்றளவுக்காவது காத்து வருகிறோம்.


கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே மூத்த குடி தமிழ் குடி என்று சும்மாவ சொன்னார்கள்.

//எனக்கென்னவோ இது நம் தமிழ் புலவர்களின் கற்பனை போலத் தான் தெரிகிறது என்னார் ஐயா.//

இல்லவே இல்லை எப்போதும் கற்பனையை தமிழ் புலவர்கள் எழுதியதில்லை, உண்மை உண்மையை மட்டுமே கற்பனை நயத்துடன் எழுதியுள்ளனர்.

ENNAR said...

// (பொன் லோகம், வெள்ளி லோகம், தாமிரம் லோகம்), மனையடி சாஸ்திரமாக இன்றும் பெயர் பெற்று வருவது தங்கள் அறிந்திருக்கக் கூடும்.//
படித்திருக்கிறேன் அதை யாரொ அழித்ததாகவும் படித்த ஞாபகம்.
சரி தாங்கள் சென்னது கற்பனையாக வைத்துக்கொள்வோம். சில கோயில்களுக்கு சென்றிருப்பீர்கள் ஏன் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள ஒரு மீ்ட்டருக்கு ஒரு மீட்டர் அகலமும் 10 மீட்டர் உயரமுள்ள அந்த கல்தூணை எப்படி கொண்டு வந்து நிமிர்தி இருப்பார்கள். இதை கற்பனை என்று சொல்ல முடியாதே.